கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - வழிகாட்டுதல் குழு அமைப்பு

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை  ஒருங்கிணைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், கும்டா, மாநகர காவல் ஆணையர் (தாம்பரம்), மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், SETC, TNSTC, MTC மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை  அமைத்து  தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச தரத்தில் இயங்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: கூடுதல்  இருக்கைகள், அம்மா உணவகம், அரசு மருத்துவமனை கோரும் பயணிகள் | Kelambakkam Bus  ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை” 30.12.2023 அன்று திறந்து வைத்தார். இப்பேருந்து முனையத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கும் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை மேம்படுத்துவது தொடர்பான பணிகளை  ஒருங்கிணைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், கும்டா, மாநகர காவல் ஆணையர் (தாம்பரம்), மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், SETC, TNSTC, MTC மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை  அமைத்து  தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவானது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கத்தை கண்காணிப்பது, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து கண்காணிப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பிளாஸ்டிக் இல்லாத பேருந்து நிலையமாக பராமரிப்பது, பேருந்து நிலையத்தை தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக அனைவருக்கும் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். மேலும் பயன்களின் வசதிக்காக பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளையும் அளிக்கும்.