பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : மருத்துவர் ரஜினிகாந்த் கைது!!

 
ttn

கரூரில் பள்ளி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ்  தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கரூர் நகர பகுதியில் உள்ள வடக்கு பிரதட்சிணம் சாலையில் டாக்டர் ஜி.சி.ஹாஸ்பிடல் செயல்பட்டு வருகிறது. மருத்துவராக பணியாற்றி வரும் ரஜினிகாந்த்,  இதே மருத்துவமனையில் காசாளராக பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காசாளராக பணிபுரிந்து வந்த பெண்னுக்கு 11 ஆம் வகுப்பு படிக்கும் பெண் இருந்தார். சிறுமி பள்ளி முடிந்ததுடன் தாய், பணிபுரியும் மருத்துவமனைக்கு வருவது வழக்கம். அத்துடன் மாணவி அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார். 

மருத்துவமனை

இந்த சூழலில் விடுமுறை என்பதால்  தனது சம்பளப் பணத்தை வாங்க தனது மகளை மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பி வைத்துள்ளார்.அப்போது மருத்துவர்  ரஜினிகாந்த் பள்ளி மாணவியை  தனியாக அழைத்து சென்று,  பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி  அந்த மருத்துவரின் அறையில் இருந்து கூச்சலிட்ட படியே வெளியில் ஓடியதுடன், நடந்தவற்றை  தாயிடம் கூறியுள்ளார்.

மருத்துவர் ரஜினிகாந்த்

இதனால் கோபம் அடைந்த மாணவியின் தாய் இதுகுறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்  கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவர் ரஜினிகாந்த் தலைமறைவானார்.

இந்நிலையில் கரூர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.