10ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் துன்புறுத்தல்- கழுத்தை அறுத்த 12ம் வகுப்பு மாணவன்!

 
harrasment

கரூர் மாவட்டம் தரங்கப்பட்டி அருகே 10 வகுப்பு மாணவையை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 12ம் வகுப்பு மாணவர், கழுத்தை அறுத்து மாணவியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் தரங்கப்பட்டி அருகே 10 வகுப்பு மாணவியை 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் அழைத்துச் சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. மாணவி கத்தி கூச்சலிட்டதால் மாட்டிக்கொள்வோம் என பயந்த அந்த மாணவன், கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் கழுத்தை அறுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். அந்த மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 வகுப்பு மாணவையை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 12ம் வகுப்பு மாணவர், கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.