சாதி குறித்து பேசினேனா?- நடிகர் கார்த்திக் குமார் விளக்கம்

 
கார்த்தி

சாதி குறித்து பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை, இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை என நடிகர் கார்த்திக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்தி

பிரபல ஆர்ஜேவாகவும், பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் கணக்கு மூலம் சுசிலீக்ஸ் என்ற பெயரில் வந்த நட்சத்திரங்களின் தனிப்பட்ட புகைப்படங்களுக்கு பின்னால் எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும்,  நடிகர் தனுஷ் இருப்பதாக கூறியுள்ளார்.  இதுதொடர்பாக தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள அவர் , யாரடி நீ மோகினி படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் உடன் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டனர்.  உலகையே மாற்றுவோம் என்று அவர்கள் கூறி வந்தனர்.


திருமணமான இரண்டே ஆண்டுகளில் கார்த்திக் குமார் ஒரு ஓரின செயற்கையாளர் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.  கடந்த 14 வருடங்களாக நான் அவரிடம் விவாகரத்து கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் கொடுக்கவில்லை தனுஷ் அவரும் அறையில் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?  கார்த்திக் குமார் தனது ஆண் நண்பர்களுடன் அடிக்கடி மும்பையில் ரூம் எடுத்து தங்குவார் என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இப்பிரச்சனை கோலிவுட்டில் பூதாகரமான நிலையில், இந்த சம்பவத்திற்கு கார்த்திக்குமார் விளக்கம் அளித்தாக ஆடியோ ஒன்று சமூகவலைதளத்தில் பரவியது. அதில் கார்த்திக் குமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும், குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தியும் பேசியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை. எனது வார்த்தைகள் அல்ல. சாதி குறித்து பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை, இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை என இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.