சுதந்திர தினத்தில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர்: கனிமொழி எம்.பி. பெருமிதம்!

 
1

திமுக துணைப் பொதுச்செயலாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் 

எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு.

அவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரம் அனைத்து மக்களுக்குமானது என்பதை உணர்த்தும் வகையிலும், இந்நாடு ஏற்றுள்ள கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையிலும், சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர்.

தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம்! இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.