#Kanimozhi எங்கள் மீதான உங்கள் வெறுப்பை நிறுத்துங்கள்- கனிமொழி

 
Kanimozhi
பெங்களூருவில் சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர்தான் காரணம் என்ற பாஜக மத்திய அமைச்சர் கே. ஷோபாவின் கருத்திற்கு தமிழகத்தில் இருந்து பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது வலைதள பக்கத்தில், "மத்திய பாஜக அமைச்சர் ஷோபாவின் பொறுப்பற்ற கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 ஜனநாயகத்தை பாதுகாக்க தேர்தல் ஆணையம் விரைந்து செயல்பட வேண்டும்.
 இது போன்ற ஒரு முக்கியமான பிரச்சினையில் அவரது வெறுக்கத்தக்க கருத்துகளின் அடிப்படையில் விசாரிக்குமாறு தேசிய விசாரணை ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.
பா.ஜ.க.வின் பிரித்தாளும் பேச்சு தமிழகத்திற்கு மட்டுமல்ல, நமது தேசத்தின் நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும்.
எங்கள் மீதான உங்கள் வெறுப்பை நிறுத்துங்கள்",என்று பதிவிட்டுள்ளார்.