காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் குறைப்பு..!!

 
காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் குறைப்பு..!! காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் குறைப்பு..!!


 காஞ்சிபுரம் பி.எஸ்.பி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு 50 எம்.பி.பி.எஸ் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.   

எம்பிபிஎஸ் ., பிடிஎஸ்., படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது  அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1.18 லட்சம் மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வுய் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 12.36 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

medical councelling

இந்நிலையில் காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவக்  கல்லூரியில் இவ்வாண்டு எம்.பி.பி.எஸ் படிப்பில் 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 20204ம் ஆண்டில் 150 மாணவர்களை எம்.பி.பி.எஸ்ஸில் சேர்க்க  அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டு 50 இடங்களை குறைத்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேசிய மருத்துவன் ஆணையத்தின் விதிகளை பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த 50 எம்.பி.பி.எஸ் இடங்கள் குறைக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இவ்வாண்டு மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.  

 இதேபோல் விதிகளை பின்பற்ராத ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் முழுமையாக அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.