‘புகார் அளித்த பெண்ணுடன் சமரசம்’... ஜாமின் வழங்குமாறு காளிகாம்பாள் கோயில் பூசாரி மனு

 
காளிகாம்பள் பூசாரி

பாலியல் புகாரில் சிக்கிய சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

tn


சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பாலியல் வழக்கில் சிக்கினார். கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் ஆங்கர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில், கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது
பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் உடனே ஜாமின் வழங்க வேண்டும் என சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என புகார் அளித்த பெண் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


"


....