நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்!

 
நாம் தமிழர் ‘காளியம்மாள்’ கலக்குவாரா?

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகியுள்ளார். 

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் தலைவர் சீமான் பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு பிறகு நிர்வாகிகள் விலகல் அதிகமாகி வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் கட்சியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே இதுகுறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, எல்லோருக்கும் ஒரே நேரத்தில் சொல்ல விரும்புகிறேன், விரைவில் பதில் சொல்கிறேன் என காளியம்மாள் கூறியிருந்தார். இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.