மகளிர் உரிமைத் தொகை: முகாம் நேற்றுடன் நிறைவு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதற்கட்ட முகாம்கள் ஜுலை 24 தேதி முதல் ஆகஸ்ட் 04 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05 தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி கடந்த 18 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. விதிவிலக்கு அளிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகைபுரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படுகிறது.


