#JUSTIN | தேசிய விருது பெற்றவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
தமிழ் திரையுலகில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
72-வது தேசிய விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் திரைப்படக் குழுவினருக்கும்,தேசிய, சமூக மற்றும் சுற்றுசூழல் கருத்துகள் கூறும் சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளசத்யஜோதி தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படக்குழுவினருக்கும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள தனுசுக்கும்,
அமரன் திரைப்படத்திற்காக பின்னணி இசைக்கான சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரு.
ராஜ்குமாருக்கும், அமரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள கலைவாணனுக்கும், மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டுள்ள சாச்சனா நமிதாஸ் அவர்களுக்கும்,
மகாராஜா திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள அனல் அரசுக்கும், மெய்யழகன் திரைப்படத்திற்காக சிறந்த ஒலிக்கலவை விருது அறிவிக்கப்பட்டுள்ள சுரேன் G.க்கும், புளூ படத்திற்காக சிறந்த ஒலி வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள TS ஹரிஹரசுதனுக்கும், விருது அறிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களின் கலைச் சேவை மக்களை மென்மேலும் மகிழ்வித்து, தாங்கள் இன்னும் பல அங்கீகாரங்களைப் பெற வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

