#JUST IN : திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு..!!
சட்டப்பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். சர்க்காரியா கமிஷன், மிசா கைது தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பேச வாய்ப்பு தருவதாக கூறியும் திமுகவினர் கேட்க மறுத்ததால், நீண்ட நேரத்திற்கு பிறகு, பேரவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், பெண்கள் தொடர்பான வழக்கிற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்றும் சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியது பெரும் அமளியை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் ஆதாரம் இன்றி பேசிய கருத்துக்கள் அனைத்தையும் உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எ.வ.வேலு திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது பற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டது உண்மையான செய்தி. எனவே அதை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக கூறினார்.இதனால் கோபம் அடைந்த திமுகவினர் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் நின்று கொண்டு தொடர்ந்து முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.சபாநாயகரின் உத்தரவை தொடர்ந்து திமுக உறுப்பினர்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
பேரவைத் தலைவர் முன் அமர்ந்து திமுகவினர் தர்ணா
— Manikandan Sankar (@reportermani) September 7, 2026
அவை காவலர்களை வைத்து திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு
முதலமைச்சரின் குற்றச்சாட்டிற்கு திமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு அளிக்க கோரிக்கை பேரவைத் தலைவர் முன் அமர்ந்து திமுகவினர் தர்ணா@arivalayam @TVKVijayHQ @Udhaystalin pic.twitter.com/rc2He8vcKr

