#JUST IN : புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பஸ்கள் (மொத்த விலை ஒப்பந்தத்தின் அடிப்படையில்) வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்ட்ரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே. நகர் மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முதன் முதலாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதலமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி இன்று தொடங்கி வைத்தார் .
சென்னையில் தாழ்தள வசதியுடன் புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள்.. தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்.
சென்னையில் ரூ.234 கோடி செலவில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 130 தாழ்தள மின்சார ஏ.சி. மாநகரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் இன்று (ஆக.25) தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் பேருந்துகள் மூலம் சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவை மேலும் மேம்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
#LIVE || சென்னையில் தாழ்தள வசதியுடன் புதிய குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள்.. தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்https://t.co/ZnYxdy25tr
— Polimer News (@polimernews) August 25, 2026

