நெல்லையில் ஜூன் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை

 
நெல்லை

நெல்லையில் புகழ்பெற்ற திருவிழாவான ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Nellaiappar Temple Ani Charottam started with a bang..! | நெல்லையப்பர்  கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கியது..!

நெல்லை டவுணில் அமைந்துள்ள நெல்லையப்பர் திருக்கோயில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயமாகும். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் ஆனி மாதம் நடைபெறும் ஆனித்தேரோட்ட திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். ஆனித் தேரோட்டத்தில் நெல்லை மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். எனவே ஆனித் தேரோட்டம் நெல்லை மக்களின் உணர்வோடு ஒன்றிய ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆனித் தேரோட்டம் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆனித் திருவிழாவிற்கான கொடியேற்றம் வரும் 13ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,ம்திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா (ஆனி 07) 21.06.2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 21.06.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-இன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.