சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு
May 11, 2026, 17:02 IST1778499146260
சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டமன்றத்தின் சபாநாயகராக தவெக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை சபாநாயகராக துறையூர் எம்.எல்.ஏ. ரவி சங்கர் தேர்வாகினார். ஜே.சி.டி.பிரபாகரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், மனுதாக்கலுக்கான அவகாசம் நிறைவடைந்ததால் ஒருமனதாக தேர்வானார்.துணை சபாநாயகர் தேர்தலுக்கும் வேறு யாரும் போட்டியிடவில்லை.

