ஜெயலலிதா 75வது பிறந்தநாள்.. தமிழக அரசு, இபிஎஸ் மரியாதை..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி , எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று ( 24-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று காலை 9.30 மணிக்கு,சென்னை ராயப்பேட்டையில் உள்ளகட்சி தலைமை அலுவலக வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். கட்சிக் கொடியைஏற்றிவைத்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குவதோடு, ‘நமது அம்மா’ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட உள்ளார்.

அத்துடன் அதிமுக சார்பில் கண்தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டிகள்நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்தல், இலவச திருமணங்கள் நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு உணவு வழங்குதல், வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட உள்ளது. காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள் மாலையணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.


