"விஜயலட்சுமி.. வீரலட்சுமி.. அடுத்ததாக சர்ச்சையில் ஜெயலட்சுமி" ஆண்டிபட்டியில் பரபரப்பு

 
ஜெயலட்சுமி

ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி வரும் ஜெயலட்சுமி ஆண்டிபட்டியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி வரும் ஜெயலட்சுமி என்ற பெண், இன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு வருகை தந்தார். அப்போது ஆளுயுர மாலை மற்றும் சால்வை அணிவித்து அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். மேலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அவரிடம் செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஜெயலட்சுமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயலட்சுமி, “எனது அம்மா ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆண்டிபட்டி தொகுதிக்கு வந்திருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நிர்வாகிகளை  சந்திக்க இருக்கிறேன். எனது அம்மாவின் கட்சி நலிவடைந்து இருப்பதால் தான் தற்போது புதிதாக அரசியல் கட்சி தொடங்க இருக்கிறேன். மேலும் மக்களுடைய ஆதரவு தனக்கு இருப்பதால் யாருடனும் கூட்டணி கிடையாது, தனித்து தான் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்தார்.