ஜெயக்குமார் விளையாட்டுப் பிள்ளை.. பழனிசாமியால் அதிமுகவுக்கு அழிவுப்பாதை - வைத்திலிங்கம்..

 
  வைத்திலிங்கம்


ஜெயக்குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை என்றும்,  எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு செல்வதாகவும்  ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் ஓபிஎஸ் ஆதரவாளர்  வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை தவிர்த்து அதிமுக ஆட்சி அமைக்க முடியாது. ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு மட்டுமே அதிமுக தொண்டர்களின் ஆதரவு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு சதவீத வாக்குகள் கூட இல்லை. தடித்த வார்த்தையால் தகுதியை மீறி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரன் கிளைச் செயலாளராகக் கூட தகுதி இல்லாதவர் என்று பழனிசாமி விமர்சித்திருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது.

ஜெயக்குமார் விளையாட்டுப் பிள்ளை.. பழனிசாமியால் அதிமுகவுக்கு அழிவுப்பாதை -  வைத்திலிங்கம்..

பண்ருட்டி ராமச்சந்திரனை பழனிசாமி விமர்சித்திருப்பது அவரது ஆணவத்தின் வெளிபாடு. முன்னாள் முதலமைச்சர் என்ற பதவிக்கு உண்டான பண்பு இபிஎஸ்க்கு இல்லை. சுய நலத்தால் பதவி ஆசையால் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றுவதற்குத்தான் டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தனர். எங்களின் ஆதரவோடு தான் டிடிவி தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், தாமும் கூட்டாக முடிவெடுத்துதான் டிடிவியை சந்தித்தார் ஓபிஎஸ்.

கூட்டமாக சென்று சந்திக்க வேண்டாம் என்றுதான் ஓபிஎஸ்சை தனியாக சென்று சந்திக்கச்சொன்னோம். ஜெயக்குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை; அவரைப் பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து விட்டு அதிமுக ஒன்று சேரும். சண்டிக்குதிரை(இபிஎஸ்) எதற்கும் உதவாது ” என்றும்  விமர்சனம் செய்தார்.