தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி - ஜெயக்குமார் கடும் விமர்சனம்!

 
jayakumar

தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொன்று தொட்டு தொடர்ந்த தமிழரின் மரபை மாற்றினார் தமிழின எதிரி கருணாநிதி. சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாய் மீண்டும்‌ அறிவித்தார் தமிழர்களின் தங்கத் தலைவி அம்மா. இனி எத்தனை நாளை‌ வந்தாலும் சித்திரை ஒன்றே என்றும் தமிழர்களின் புத்தாண்டு. தமிழ் மக்களின் நலன் காத்த தாயின் ஆணையின்படி சட்ட பேரவை தலைவராக எனது தலைமையில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு விழா. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.