சவுக்கு சங்கருக்கு சிறை: நிறுத்திவைத்த தண்டனை உத்தரவு நீட்டிப்பு

 
s

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  நிறுத்தி வைத்திருந்த சிறை தண்டனை உத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம் .

நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் தானாக முன்வந்து  வழக்கு  பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

 மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஜாக்கிரதி சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.  பின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா , மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.   

sa

இந்த மனுவை கடந்த நவம்பர் 11ஆம் தேதி பரிசீலனை செய்த நீதிபதிகள் மனுதாரர் எவ்வளவு நாள் சிறையில் உள்ளார் என கேட்டு இருக்கிறார்கள் . இப்போது சவுக்கு சங்கர் சார்பில் வழக்கறிஞர் ரோமில் பாதக் ஆஜராகி செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி 2 மாதங்கள் சிறையில் உள்ளதாக தெரிவித்த கருத்துக்கள் பொதுவானது என்று கூறியிருக்கிறார்.

 இந்த வாதங்களுக்கு பின் மனுதாரர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கப்படுகிறது.  வழக்கு தொடர்பாக வீடியோ வெளியிடக்கூடாது. உயர்நீதிமன்ற கிளை பதிவாளர் , மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் உள்ளிட்டவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.  

 இந்நிலையில் இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .  சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சார்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் வேறொரு நீதிமன்றத்தில் இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  இதை மறுத்த நீதிபதிகள் ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை மனுதாரர் பின்பற்றுகின்றாரா?என கேள்வி எழுப்பி எழுப்பினர்.  

பின்பற்றுகிறார் என்று சவுக்கு தரப்பில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சொல்ல , தினமும் நீதிமன்றம் சென்று கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார்.

 வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் , சவுக்கு சந்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உத்தரவினை நிறுத்தி வைத்த உத்தரவை மேலும் நீட்டித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.  

அதே நேரம், ஜாமீன் நிபந்தனை தளர்வு தொடர்பாக மனுவை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறார்கள் நீதிபதிகள்.