தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!
Sep 24, 2020, 11:56 IST1600928803000
தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தென் தமிழகம், புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைபெய்யு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.