வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!!

 
rain

நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து,  காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவுகிறது. இதனால் ஆந்திர கடலோரப் பகுதி முதல் குமரி கடல் பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும் , வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ,கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ,சேலம் ,நாமக்கல் ,பெரம்பலூர் ,திருச்சி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

rain

நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,நீலகிரி, கோவை ,திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ,சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, மதுரை ,விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

நாளை மறுநாள் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ,திருப்பூர், ஈரோடு, நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், புதுவை ,காரைக்கால் கடலூர் மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய கூடும்.

rain

வருகிற 15-ஆம் தேதி வேலூர் ,ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ,சேலம் ,தர்மபுரி ,நீலகிரி ,ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 16ஆம் தேதி நீலகிரி, ஈரோடு ,சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய கூடும்.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இன்று குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

இன்று மற்றும் நாளை கேரளக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.  இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.