மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததே இவர்களுக்காக தான்... நிர்மலா தேவி பரபரப்பு குற்றச்சாட்டு!!
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/ae9c315886b103a1eddc7ea32c275941.gif)
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் நடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அத்துடன் இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018ல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கானது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுரத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், முருகன் , கருப்பசாமி மீதான குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர்களை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும் நிர்மலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் ஒன்று செய்துள்ளார். அதில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் தனக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இரண்டாவது ,மூன்றாவது குற்றவாளிகளான மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் , ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் அவர்களுக்காகத்தான் மாணவிகளிடம் செல்போனில் தவறாக வழிநடத்த முயற்சித்தேன். எனினும் இதனால் எந்த மாணவியும் பாதிக்கப்படவில்லை என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளை விடுதலை செய்து பிறகு என்னை பல பிரிவுகளில் கீழ் தண்டித்து பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ள அவர், இந்த வழக்கில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இடைக்காலஜாமின் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் சிபிசிஐடி போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி விசாரணையை ஜூன் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.