இதோடு பிரச்சனை முடிந்துவிட்டதா?? வெறும் கண்துடைப்பு நாடகம் - பிரேமலதா கண்டனம்..

 
இதோடு பிரச்சனை முடிந்துவிட்டதா?? வெறும் கண்துடைப்பு நாடகம் -  பிரேமலதா கண்டனம்..

அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டதாக அரசு நினைப்பதாக  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.  

கடந்த சில தினங்களுக்கு முன்பு,  அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்”என்று  பெயர் சூட்டப்படும் என   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைச் சுட்டிக்காட்டி பிரேமலதா வியயகாந்த் விமர்சித்திருக்கிறார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர், பால் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து அடுத்தவர் மீது குறை சொல்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்” என்று கூறினார்..

இதோடு பிரச்சனை முடிந்துவிட்டதா?? வெறும் கண்துடைப்பு நாடகம் -  பிரேமலதா கண்டனம்..

நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது நிச்சயமாக கண்டனத்திற்குரிய விஷயம். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், ஒரு பெயரை சூட்டிவிட வேண்டியது, ஒரு சிலையைத் திறந்துவிட வேண்டியது. இதுபோல் செய்தால் அத்துடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்” என்று தெரிவித்தார்..