பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா?

 
1 1

மோகன் பகவத் சமீபத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டார். அவர் கூறுகையில், "ஒரு நபர் 75 வயதை எட்டிய பிறகு தனது பொறுப்புகளை மாற்றி ஓய்வெடுக்க வேண்டும்" என்றார். இது ஒரு பொதுவான செய்தி மட்டுமல்ல, புதிய விவாதத்திற்கும் வழிவகுக்கிறது. 

ஏனெனில் அவரது வயது தற்போது 74. அடுத்த ஆண்டு அவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. மேலும் மோகன் பகவத்தின் அறிக்கை பல விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது.

மோகன் பகவத்தின் அறிக்கைகளைத் தொடர்ந்து, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். "பகவத் 75 வயதில் ஓய்வு பெற விரும்பினால், அதே விதி மோடிக்கும் பொருந்தும். அவருக்கும் இப்போது 74 வயது. அமித் ஷா அண்மையில் குஜராத்திற்கு விஜயம் செய்தபோது ஒரு அறிக்கையை வெளியிட்டார். 

தனது இரண்டு தசாப்த கால அரசியல் வாழ்க்கை போதுமானது என்று அவர் கூறினார். அரசியல் ஓய்வுக்குப் பிறகு, வேதங்கள் மற்றும் உபநிடதங்களைப் படிப்பதோடு இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தப் போவதாகக் கூறினார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே, ''பிரதமர் மோடி அரசியல் இருந்து ஓய்வு பெற உள்ளார். பாஜக வெற்றி பெற்றால் அமித்ஷா அல்லது வேறு ஒருவர் தான் பிரதமராக நியமனம் செய்யப்படுவார்கள்'' என்று தகவல் வெளியாகி இருந்தது. 

ஆனால் பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்த கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக பிரதமர் மோடியே பிரதமராக பதவியேற்றார். சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எழுப்பிய கேள்விக்கு பாஜக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.