#IPL ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிப்பதில் சிக்கல்

 
#IPL ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிப்பதில் சிக்கல். 

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் , சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

#IPL ராஜஸ்தான் அணி புள்ளிபட்டியலில் முதல் 2 இடங்களை பிடிப்பதில் சிக்கல். 

பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் இந்த ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாகவே இருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்திற்குள் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் களமிறங்கியது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும்,கேட்மோர் 18 ரன்னிலும்,சஞ்சு சாம்சம் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். அஸ்வின் 28 ரன்களில் ஆட்டமிழக்க தனி ஆளாக போராடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி சற்று நேரத்தில் களமிறங்கி ஆட உள்ளது.