இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..

 
tn

இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

 இந்தியாவில் கொரோனா ஒரு பக்கம் இருக்க, இன்ஃப்ளூயன்சா ஏ வைரசின் துணை வகையான எச்3என்2  வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும்,  முதியோரையும்  அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.   இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால்  இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  மத்திய சுகாதாரத்துறை  அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.  

இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..

இந்நிலையில், இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
“*மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
* ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.  
*காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
*லேசான காய்ச்சல், இருமல் பாதிப்பு கொண்டவர்கள் ஏ வகை. தீவிர காய்ச்சல் அதிக இருமல் கொண்டவர்கள் பி வகை. தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்டோர், இணைநோய் இருப்போர் என 2 வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கான பரிசோதனையோ, மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது.
*அதேவேலை சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வழி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.

இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..
*குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
*வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய 2 எண்களை தொடர்பு கொண்டு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனை மருத்துவ பெறலாம்.
*மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரிவோர், ஆய்வங்களில் பணி புரிவோர் கட்டாயம் என்95 முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
*மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
* 65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது” என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.