பிரதமர் நரேந்திர மோடிக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் வாழ்த்து..!
![1](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/535f2ffe695b0e75d7258affbf52cb63.png)
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றாலும், பாஜக தனித்து நின்று பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. ஆதலால், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவை பெற்று தான், பாஜக ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நாளை 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனது சக அமைச்சர்களுடன் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை மோடி சமன் செய்ய போகிறார். இந்த சூழலில், நம்பர் 1 உலகப் பணக்காரரான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் எனது நிறுவனங்கள் இன்னும் சிறப்பான பணிகளை செய்யும் காலத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Congratulations @narendramodi on your victory in the world’s largest democratic elections! Looking forward to my companies doing exciting work in India.
— Elon Musk (@elonmusk) June 7, 2024
Congratulations @narendramodi on your victory in the world’s largest democratic elections! Looking forward to my companies doing exciting work in India.
— Elon Musk (@elonmusk) June 7, 2024