2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் - செல்வப்பெருந்தகை!

 
1 1

நாகர்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம்  காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறிய​தாவது:-

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஆயத்​தக் கூட்​டம், கிராம கமிட்​டி​யினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்​கும் நிகழ்ச்​சி​யில் நான் பங்​கேற்​றேன். வரும் தேர்​தலில் கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று எம்​.பி.எம்​எல்​ஏக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். ஆனால், கூட்​டணி குறித்​தும், எந்த தொகு​தி​களைக் கேட்க வேண்​டும், எவ்​வளவு தொகு​தி​கள் கேட்க வேண்​டும் போன்​றவை குறித்​தும் கட்​சி​யின் அகில இந்​திய தலை​மை​தான் முடிவு செய்​யும். எனினும், வரும் தேர்​தலில் 200 இடங்​களுக்கு மேல் இண்​டியா கூட்​டணி வெற்​றி​பெறும்.

தவெக தலை​வர் விஜய், மதவாத சக்​தி​களிடம் மாட்​டிக் கொள்​ளக் கூடாது. பாஜக மதவாதக் கட்​சி. காங்​கிரஸ் கட்சி எல்​லோருக்​கு​மான கட்​சி, ஜனநாயகத்தை விரும்​பும் கட்​சி. தேர்​தலை மட்​டும் குறிக்​கோளாக கொண்டு காங்​கிரஸ் செயல்​படு​வ​தில்​லை. மக்​கள் நலனைக் கருத்​தில் கொண்டே செயல்​படு​கிறது. திருப்புவனத்தில் போலீஸாா் தாக்கியதில் மரணமடைந்த காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன். ஆவின் துறையில் அவரது சகோதரருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் பணியாற்றும் அவா், மதுரைக்கு இடமாறுதல் கேட்டுள்ளாா். இதுகுறித்து முதல்வரிடம் கோரிக்கை வைப்பதுடன், நேரில் சந்தித்தும் வலியுறுத்துவோம். இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது ராபர்ட் புரூஸ் எம்​.பி.ரூபி மனோகரன் எம்​எல்ஏ உடனிருந்​தனர்.