புதுச்சேரியில் 3 மாடி புதிய வீடு சீட்டுகட்டு போல் இடிந்து விழுந்து விபத்து
![கட்டிடம்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/af3462c2f4b9c80b1b8212e00fb41bce.png)
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட உப்பனாரு வாய்க்காலில் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே சாவித்திரி என்பவர் புதிதாக கட்டிவந்த 3 மாடி கட்டிடம் அடியோடு சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி வீட்டுக்கு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் வீடு இடிந்து விழுந்ததால் வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட உப்பனாரு வாய்க்காலில்
— sathesh kumar (@sathesh1595) January 22, 2024
புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்தது pic.twitter.com/Z5WWq2hr1p
வரும் 26 ம் தேதி புதுமனைப் புகுவிழா நடைபெற இருந்த நிலையில் விபத்து. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.