அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

 
சத்யா

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

tn

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா என்கின்ற சத்யநாராயணன் சென்னை தி.நகர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.  அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில்  தனது சொத்து மதிப்பு 2 கோடியை 78 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டபோது,  அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே இரண்டு லட்சம் என தகவல் வெளியிடப்பட்டது.  இதன் காரணமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லம், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சத்யாவுக்கு தொடர்புடைய 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் வீடு, அலுவலகங்கள் என 19 இடங்களிலும், கோவையில் 2 இடங்கள், திருவள்ளூரில் ஒரு இடத்தில் என 22 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.