“இது ஆரம்பம்தான்... 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்ய போகிறார் என நினைக்க வேண்டாம்”- இளையராஜா பேட்டி

 
ச்

இது ஆரம்பம் தான், இந்த சிம்பொனி இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும்... 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்ய போகிறார் என நினைக்க வேண்டாம் எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்ககூடிய அளவிற்கு நான் இல்லை என இசைஞானி இளையராஜா கூறினார்.

Image

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த பிறகு சென்னை வந்த இசைஞானி இளையராஜாவை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஏராளமான இளையராஜா ரசிகர்களும் விமான நிலையத்தில் இருந்து இளையராஜாவை ஆரவாரம் செய்து வரவேற்றனர். பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், விபி.துரைசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோரும் இசைஞானி இளையராஜாவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, “அனைவருக்கும் நன்றி! மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியமைத்து வைத்ததே இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள் புரிந்தார். இது சாதாரண விஷயம் அல்ல மியூசிக்கை எழுதிவிடலாம். எழுதி கொடுத்தால் அவர்கள் வாசித்து விடலாம். ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வகையில் வாசித்தால் எப்படி இருக்கும்? நாம் எல்லோரும் பேசுகிற மாதிரி எல்லோருக்கும் ஒன்றும் புரியாத மாதிரி இருக்கும் அல்லவா? அங்கே சென்றதும் Rehearsal கலந்து கொள்ள நேரம் இருந்தது. அரங்கேற்றம் பொழுது எந்தவிதமான விதிமுறைகளுக்கு மீறி தவறு நடக்காமல் மிக்டெல் டாம் என்பவர் தலைமையில் 80 பேரும் இசை அமைத்தார்கள். இந்த சிம்போனி அரங்கேற்றத்தின் போது மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது. அப்போது நமக்கு வயிற்றெல்லாம் கலக்கும். எல்லோருடைய கவனமும் அதன் மீதுதான் இருக்கும். ஒரு ஸ்வரம் வாசிக்கும் போது அந்த ஒரு ஸ்வரத்தை கையை காட்டி வாசிக்கும் போது எல்லோருடைய கவனமும் அந்த ஒரு நோட்டில் இருக்கும். அவர்கள் வாசிக்கும் போது கேட்கிறவர்கள் மூச்சு விட மறக்கும் அளவிற்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Image

வெஸ்டர்ன் மியூசிக்கலி சிம்பொனி வாசித்து முடியும் வரை யாரும் கைதட்ட மாட்டார்கள், கைதட்ட கூடாது அது விதிமுறை. ஆனால் நமது ரசிகர்களும் அங்கு வந்திருந்த பொதுமக்களும் அனைவரும் 1st moment முடிந்ததும் கைதட்டினார்கள், வாசிப்பவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் திரும்பி என்னை பார்த்தார்கள், அவர்கள் அப்படித்தான் என சொல்லி சிரித்தேன். அனைவருக்கும் மிகவும் நன்றி! இந்த இசை உலகம் எங்கும் கொண்டு செல்லப்படும், இதோடு நின்று விடப்போவதில்லை இது ஆரம்பம்தான், 82 வயசு ஆச்சு இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்... நீங்கள் நினைக்கக் கூடிய அளவிற்கு நான் இல்லை, எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்கக்கூடிய நான் இல்லை பண்ணைபுரத்தில் இருந்து புறப்படும் போது வெறும் காலோடு நடந்து என்னுடைய காலில் தான் நடந்து இந்த இடத்திற்கு என்னுடைய காலில் வந்து தான் நிற்கிறேன். இதை இளைஞர்கள் உணர வேண்டும், அவர்களும் வாழ்க்கையில் இதை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு அவர்கள் அவரது துறையில் மென்மேலும் வளர்ந்து நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் அறிவுரை” என்றார்.