“அனாவசியமான கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்”- செய்தியாளர்களிடம் கோவப்பட்ட இளையராஜா

 
ச்

சிம்பொனி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப் பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை என இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சியை நாளை மறுதினம் லண்டன் அப்பல்லோ அரங்கில், அரங்கேற்றம் செய்ய இருக்கிறார். இதற்காக இன்று லண்டன் புறப்பட்ட இளையராஜா, முன்னதாக சென்னை சர்வதேச விமானம் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக உலகிலேயே தலைசிறந்த இசைக் குழுவான "Royal philharmonic orchestra" லண்டன் வருகிறார்கள். அவர்கள் வாசித்து ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து 8 ஆம் தேதி இந்த இசையை அப்போலோ அரங்கில் வெளியிட உள்ளோம். வந்திருக்கும் ரசிகர்களுக்கு மிகப் பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.


ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக நல்ல மனதோடு வந்திருக்கிறேன். என்னை நல்லபடியாக வாழ்த்தி இசை நிகழ்ச்சியை நடத்த இறைவனை வேண்டி அனுப்புங்கள். இது என்னுடைய பெருமை அல்ல நாட்டினுடைய பெருமை, இந்தியாவினுடைய பெருமை,INCREIDBLE INDIA என்பது போல் INCREDIBLE ILAIYARAJA. நீங்கள் எல்லாம் சேர்ந்தது தான் நான் உங்களுடைய பெருமையை தான் நான் அங்கு சென்று நடத்தப் போகிறேன்*. எல்லாருக்கும் வாழ்த்துக்கள் இறைவனுடைய அருள் உங்கள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்” என்றார். 

தேவா 2கே கிட்ஸ் பாடல்களை பயன்படுத்துவதற்கு காப்புரிமை இல்லை என்று தெரிவித்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அதற்காகவா அழைத்துள்ளோம் என்றார். தமிழகத்தில் சிம்பொனி நிகழ்ச்சி ஒழிக்க வாய்ப்பு உள்ளதா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது, அனாவசியமான கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். நான் என் வேலையில் மட்டும் தான் கவனமாக இருப்பேன்...  நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்கிறீர்களா? இல்லையா? என்பது உங்களுக்குத்தான் தெரியும் எனக் கூறி சென்றார்.