இனி செல்போன் உபயோகித்தால் கம்பி எண்ணுவீங்க..!
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2022 ஆம் ஆண்டில் மட்டும் செல்போன் பயன்பாட்டால் 7,558 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 3,395 பேர்தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் இது 15.7% அதிகம் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், 2022 இல் செல்போன் பயன்பாட்டால் 39 சாலை விபத்துகள் ஏற்பட்டு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். நல்லவேளையாக சென்னையில் செல்போன் பயன்பாட்டால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் பைக் டாக்ஸி ஓட்டுபவர்களும் சரி, ஆட்டோ ஓட்டுநர்களும் சரி செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டுவதை நம்மால் காண முடிகிறது. பொதுவாக மொபைல் ஸ்டாண்டில் கைபேசியை வைத்து லொகேஷன் பார்ப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் மொபைல் ஸ்டாண்டில் கைபேசியை வைத்து வீடியோ பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டுவது பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது. அவர்கள் போலீஸ்காரர்களை பார்த்ததும் உடனடியாக வீடியோவை மாற்றி விட்டு லொகேஷனை ஆன் செய்து விடுகின்றனர். அவர்கள் எப்போதும் வீடியோ தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இதை நிரூபிப்பதற்கு எங்களிடம் போதிய நிபுணத்துவம் இல்லை. ஆகையால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது சிரமமாக உள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். பெரும்பாலும் விபத்துக்கு கைபேசி தான் காரணம் என்று கூறப்பட்டாலும், அதனை வாகன ஓட்டிகள் ஏற்பதாக இல்லை. விபத்து ஏற்பட்டதும் இன்சூரன்ஸ் மூலமாக அந்த தொகையை பெற்றுக் கொள்கின்றனர்.
மேலும், தங்கள் மீதான தவறை ஒப்புக்கொள்ள வாகன ஓட்டிகள் மறுக்கின்றனர். இது தொடர்பாக ஓட்டுனர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது:
இதன் மூலம் வாகனத்தில் பயணிப்பவர்களை மட்டுமின்றி சாலையோரத்தில் நடந்து செல்பவர்களையும் அவர்கள் ஆபத்தில் தள்ளுகின்றனர். கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது அதிகம் பேர் உயிரிழக்க நேரிடுகிறது என்று அவர் கூறினார்.
டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டிக் கொண்டே ஐபிஎல் கிரிக்கெட், டிவி சீரியல் மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை பார்ப்பதாகவும் போக்குவரத்து போலீசார் ஒருவர் வேதனை தெரிவித்தார். இது குறித்து போக்குவரத்து நிபுணர் ஒருவர் நம்மிடம் கூறியது:
20% வாகன ஓட்டுகள் பெரும்பாலும் வாகனம் ஓட்டும்போது அலைபேசி பயன்படுத்துகின்றனர். வாகனம் ஓட்டும் போது செல்போனில் அழைப்பது, வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு என்று அவர் கூறினார்.
கைப்பேசி பயன்பாட்டுக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. பொதுவாக கைபேசி என்பது பிறரை தொடர்பு கொள்ளும் சாதனம் தான் தவிர, வேறு யாராவது உயிருக்கு உலைவைப்பது அல்ல. ஆகையால் வாகன ஓட்டிகள் இனியாவது வாகனம் ஓட்டும்போது தங்களை நம்பி வந்தவர்களின் உயிருக்கு உலை வைக்காமல், சாலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


