சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குத் தொடருவேன் - குஷ்பு

 
ff ff

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு சர்ச்சை பேசினால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு பிறகு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் . ஆளுநர் ரவி,  பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில் சமீபத்தில் காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமாரை  விமர்சனம் செய்து பேசியிருந்தார்.  இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இதன் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளffது.

ff

இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி  கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப்படும் என்று என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

tt

 தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வேன் என்று அவர் கூறியுள்ளார் . மீண்டும் மீண்டும் பெண்களை புண்படுத்தும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசி வருகிறார்.  பெண்களை அவதூறாக பேசுவதால்  வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.