"பிரதமர் மோடியை வாழ்நாளில் மறக்க மாட்டேன்"- பிரேமலதா விஜயகாந்த்
Apr 14, 2025, 17:30 IST1744632048328

பிரதமர் மோடிக்கும் கேப்டன்- விஜயகாந்துக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டிய ஒன்று என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க - அதிமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் மோடியை புகழ்ந்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பிரதமர் மோடிக்கும், விஜயகாந்த்க்கும் இடையில் இருந்த உறவு, அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார். இருவரது நட்பு, பரஸ்பர மரியாதையிலும், அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று. பிரதமர் மோடியை என் வாழ்நாளில் என்றும் மறக்கமாட்டேன். விஜயகாந்த் உடல்நலம் குறித்து சகோதரரை போன்று பிரதமர் மோடி விசாரிப்பார். உங்கள் மூத்த சகோதரராக நினைத்து என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என பிரதமர் மோடி கூறினார்.