கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி

 
murder

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

murder

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கரட்டு காலனி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது(30), செங்கல் காளவாசலில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை காலை இவரது வீட்டின் அருகே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில்  பிணமாக கிடந்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த அலங்காநல்லூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.மேலும் கொலை செய்யப்பட்ட சரவணன்  மனைவி ஜோதிகா வயது (23) என்பவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

அலங்காநல்லூர் வலசை பகுதியை சேர்ந்த உடப்பன் வயது(22) என்பவர் கொலை செய்யப்பட்ட சரவணன் வசிக்கும் பகுதியில் பேவர் பிளாக் பதிக்கும் பணிக்காக சென்றுள்ளார். சுமார் 10 தினங்களுக்கு மேலாக அப்பகுதியில் வேலை பார்த்த உடப்பனுக்கும் சரவணன் மனைவி ஜோதிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டனர். பின்னர் இருவரையும் தேடி கண்டுபிடித்து இரு தரப்பினரிடம் பேசி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜோதிகாவை அவரது கணவரான சரவணன் உடன் வசிக்க வைத்துள்ளனர்.

murder

இந்நிலையில் சம்பவத்தன்று ஜோதிகாவும், உடப்பனும் மீண்டும் சந்தித்துள்ளனர். அப்போது தங்களது வாழ்க்கைக்கு குறுக்கீடு செய்யும் சரவணனை கொலை செய்ய திட்டம் தீட்டிள்ளனர். அதன்படி சரவணன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உடப்பன் தனது நண்பனான 17 வயது  சிறுவனுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து சரவணனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் சரவணனின் பிரேதத்தை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த திட்டம் தீட்டி அதன் படி உடப்பனும் 17வயது சிறுவனும் சரவணனின் உடலை வெளியே எடுத்து வரும்போது ஆட்கள் நடமாட்டம் இருந்துள்ளது. அதனால் பதட்டம் அடைந்த உடப்பன் சரவணனின் உடலை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சரவணன்  மனைவி ஜோதிகா வயது(23), அவரது கள்ளக்காதலன் உடப்பன் வயது(21) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த அலங்காநல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்