மனிதநேயமிக்க செயல்! தண்டவாளத்தில் யானைகள் கூட்டம்... ரயிலை நிறுத்தி வழிவிட்ட வனத்துறையினர்!

 
11

யானைகள் தண்டவாளத்தை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்..யானைகள் பாதுகாப்பாக செல்ல ரயிலை நிறுத்திய வனத்துறை ஊழியர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டு.

வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு, உடனடி எச்சரிக்கை நடவடிக்கை, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் ஒருங்கிணைப்பு ஆகியவை ஹோஜாய் மாவட்டத்தில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியது.

ஹோஜாய் மாவட்டத்தின் லங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஹவாய்ப்பூர் பகுதியில், 'டவுன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' ரயில் நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, வனத்துறையினர் யானைக் கூட்டம் ரயில் பாதையைக் கடக்க முயல்வதைக் கண்டனர்.

வனத்துறையினர், ரயில் ஓட்டுநர் (லோகோ-பைலட்) மற்றும் லும்டிங் ரயில்வே கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் துரித நடவடிக்கையால், யானைக் கூட்டம் பாதுகாப்பாகக் கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இந்த நெகிழ்ச்சியான விடியோவை அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

ரயில் பாதையில் ஒரு எதிர்பாராத நிறுத்தம்; ஆனால் அது நம் அன்பிற்குரிய பிரம்மாண்டமான விலங்குகள் கடந்து செல்வதற்காக மட்டுமே.

இன்று காலை, ஹோஜாய் மாவட்டம், நாகான் தெற்குப் பிரிவு, லங்கா சரகத்திற்கு உள்பட்ட ஹவாய்ப்பூர் பகுதியில் யானைக் கூட்டம் பாதையைக் கடக்க முற்பட்டதால், 'டவுன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' ரயில் நிறுத்தப்பட்டது."

வனத்துறை ஊழியர்கள், ரயில் ஓட்டுநர் மற்றும் லும்டிங் ரயில்வே கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையால், யானைக் கூட்டம் பாதுகாப்பாகக் கடந்து செல்வது உறுதி செய்யப்பட்டதுடன், ரயில் தனது பயணத்தையும் தொடர்ந்தது. மற்றொரு நாள், மற்றொரு பாதுகாப்பான கடப்பு! என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும், வனத்துறை ஊழியர்கள் அர்ப்பணிப்புடனும், விழிப்புடனும் இருந்து, அமைதியான முறையில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். இவை அமைதியான கதைகளாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையாகும்," என்று அமைச்சர் பதிவிட்டுள்ளார்.