'வேற்றுமையில் ஒற்றுமை' கருப்பொருளில் ஒடிசா கடற்கரையில் பிரமாண்ட மணல் சிற்பம்..!

 
1

புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவின் பூரி கடற்கரையில் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருப்பொருளில் பிரமாண்ட மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையையும் தேசிய ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த கலைப்படைப்பில் தேசிய மூவர்ணக் கொடியும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் இந்த மணல் சிற்பத்தை பார்வையிட்டு அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.