இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறுவது எப்படி? முழு விவரம்

 
நாய்

சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பினை தொடர்ந்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் தங்களது செல்லப்பிராணிக்கு உரிமம் பெற ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். 

Image

இந்நிலையில் அதிக அளவில் உரிமையாளர்கள் இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் பின்வருமாறு:

• பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்னும் இணையதளத்திற்கு சென்று இணையதள சேவைகள் (Online Services) என்பதனை தேர்வு (Click) செய்யவும், பின்னர் அதில் உள்ள பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் (Pet Animal License) என்பதனை தேர்வு (Click) செய்யவும், பின்னர் New user என்பதை தேர்வு (Click) செய்து அதில் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க எண்ணை (Pin Number) உள்ளீடு செய்யவும்,

• இதனை தொடர்ந்து தங்களது அலைபேசி எண்ணையும் நான்கு இலக்க எண்ணையும் (Pin Number) பயன்படுத்தி உள்நுழையவும்,

• புதிய செல்லப்பிராணிகளின் உரிமம் (New Pet Registration) என்பதை தேர்வு செய்யவும், செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி (ARV) செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதி மொழி (Declaration) அளித்த பின்னர் சமர்ப்பிக்க (Submit) வேண்டும்.

நல்லதே நினைக்கும் செல்லப்பிராணிகள்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வளர்க்கும்  திசை.. வாஸ்து டிப்ஸ் | Important vastu tips for keeping pets at home in  Tamil - Tamil Oneindia

• இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு உரிமையளார்கள் தங்களது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள இணைய முகப்பு (Portal) பக்கத்திற்கு சென்று இணைய வழியில் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) பணம் செலுத்த வேண்டும்,

• அதன் பிறகு செல்லப்பிராணிகளின் உரிமம் (Pet Animal License) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (Link) உருவாகும்.
அதனை கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை (Pet Animal License) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆகவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உட்பட்ட செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆண்டு தோறும் தங்களது செல்லப்பிராணிகளின் உரிமத்தை இணையவழியில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தவறும் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.