எப்படி இருக்கிறார் விஜயகாந்த்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்திற்கு தொடர்ந்து இருமல் பாதிப்பு இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் விஜயகாந்த் உடல்நிலை சீராகவே உள்ளது. ஏற்கனவே சிறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்றார்.