இல்லத்தரசிகள் ஷாக்..! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!
May 14, 2026, 06:00 IST1778718646000
அமுல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று முதல் ஒரு லிட்டர் அமுல் பாலுக்கு நுகர்வோர் 2 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது, ஒரு லிட்டர் பாலின் விலையை அமுல் 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.இந்த விலை உயர்வு இன்று, அதாவது மே 14-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இது சாமானிய மக்களின் பணப்பையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமுல் பாலின் விலை 1 முதல் 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், 500 மிலி அமுல் தாஸா பால் பாக்கெட்டின் விலை 28 ரூபாயிலிருந்து 29 ரூபாயாக அதிகரிக்கும்.
- அமுல் தாஸா 1 லிட்டர் பாலின் விலை 55 ரூபாயிலிருந்து 57 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அமுல் டீ ஸ்பெஷல் 1 லிட்டர் பாலின் விலை 63 ரூபாயிலிருந்து 66 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- எருமைப் பால்: 500 மில்லி பாலின் விலை 37 ரூபாயிலிருந்து 39 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அமுல் கோல்ட் விலை 34 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயர்ந்தது.
- 500 மில்லி அமுல் சக்தி பாலின் விலை 34 ரூபாயிலிருந்து 35 ரூபாயாக உயரும்.

