வரும் ஜன.17ம் தேதி திங்கள்கிழமை அரசு விடுமுறை

 
assembly

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. 

அரசு அலுவலகங்கள் இன்று விடுமுறை | Dinamalar Tamil News

இந்நிலையில், 14-01-2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்தவூருக்கு சென்று பண்டிகையை மகிழ்விடன் கொண்டாட ஏதுவாகவும் 16-01-2022 அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் நிலையிலும், 18-01-2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், 17-01-2022, அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16-01-2022 அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில், 17 ஆம் தேதியன்று தமிழக அரசு அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அதற்கான பணி நாளாக 29-01-2022 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.