நாளை இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

 
1 1

லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா ஜூலை 07ம் தேதி அன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்திற்கு மட்டும், சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூலை 07ம் தேதி (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகும். அன்றைய கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 7ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.