இன்று இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து வகையான அரசு அலுவலகங்களுக்கும் மார்ச் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில் முக்கிய அரசு தேர்வுகள் திட்டமிட்டபடியே நடைபெறும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் விடுமுறையானது அய்யா வைகுண்டரின் 190வது அவதார தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி மார்ச் 4ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழா மார்ச் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளை ஈடு செய்திடும் வகையில் மார்ச் 15 தேதி சனிக்கிழமை முழு பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.