விடுமுறை முடிந்து இன்று முதல் முழு அளவில் செயல்படுகிறது ஐகோர்ட்
Jun 3, 2024, 10:31 IST1717390900558
![tt](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e888719341896746206fd45e03515511.jpeg)
ஒருமாத கால கோடை விடுமுறை முடிந்து இன்றுமுதல் முழு அளவில் செயல்படுகிறது சென்னை உயர் நீதிமன்றம். இன்றுமுதல் பொதுநல வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது.
தமிழ்நாட்டில் நிலவிய கடும் வெப்பத்தினால் கடந்த மே 1 முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றதிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது வெயிலின் தாக்கம் குறைந்ததால் ஒரு மாத கால விடுமுறைக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் இன்று முதல் முழு அளவில் இயங்குகிறது.