தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யும்!
Sep 29, 2020, 12:40 IST1601363455000
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் . தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் அண்ணாமலை நகர், சிதம்பரத்தில் 13 செமீ, கொள்ளிடம் 11செமீ,கொத்தவசேரி 9 செமீ மழை பதிவாகியுள்ளது.