செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணை
Jan 30, 2024, 09:27 IST1706587025870
![senthil balaji](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/7ccab8f5d0d0e4035e895e27484bd1f1.jpg)
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17ஆவது முறையாக நீடிக்கப்பட்டு 31ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.