ஒமிக்ரான் பரவல்- பிரதமரின் தமிழக வருகை ரத்து?

 
modi

தடுப்பூசி செலுத்துவதில் பெரியவர்களை விட சிறார்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கரோனா"- சுகாதாரத்துறைச்  செயலாளர் பேட்டி... | nakkheeran

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைத்து கட்டுபாடுகளையும் பின்பற்ற வேண்டும். நேற்று வரை உலக அளவில் 26 லட்சம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருநகரங்களில் டெல்டா மரபணு வைரஸை காட்டிலும் ஒமிக்ரான் மரபணு வைரஸ் பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது, சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே உள்ளது. இதற்காக பொதுமக்கள் அச்சம் மற்றும் பதற்றமடைய தேவையில்லை. தொற்று அறிகுறி தென்பட்டால் ஸ்கீரினிங் சென்டர்களில் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடக்க நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். 

தமிழகத்தில் தற்போது வரை 1,16,587 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 1730.97 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கையிருப்பில் நிலையில் உள்ளது. 317 பிராண வாயுவை உருவாக்கும் கருவி உள்ளது. பெரியவர்களை விட சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். 3 நாட்களுக்குள் 12 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை பொறுத்து, மேலும் கட்டுபாடுகள் விதிக்கலாமா என மருத்துவ வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் முடிவெடுப்பார். வரும் 12 ம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்கும்” எனக் கூறினார்.