ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
பெரியார் சிலை உடைப்பேன் என பேசியது, திமுக எம்.பி. கனிமொழி மீது அவதூறாக பேசியது என தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம் என ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளளது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் மாதம், திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், 2018 ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக ட்விட்டர் தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க நிர்வாகிகள், தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளித்தக்கபட்டது. இந்த புகாரில் கனிமொழிக்கு எதிரான புகாரில் ஈரோடு நகர காவல்துறையும், பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் ஹெச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணை முடிக்க சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன் நடைபெற்றது.பெரியார் சிலை உடைக்க வேண்டும் ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும் எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எந்த ஆதாரங்கள் ஆவணங்கள் எதனையும் விசாரணை அதிகாரி மற்றும் புகார்தார் தாக்கல் செய்யவில்லை எனவே வழக்கின் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயவேல், ஹெச். ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்க பட்டுள்ளது. எனவே அவரை குற்றவாளி என தீர்மானிப்பதாகவும். இரு பதிவுகளும் ராஜா அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பபட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது அவ்வாறு அனுப்பவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்கள் குற்றவாளி தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும் இரண்டு வழக்கில் தனித்தனியாக மாதம் சிறை தண்டனை 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச். ராஜா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது .இந்த வழக்கு விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீடு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.